Friday, March 17, 2017

தைராய்ட் நோய் போக்கும் இயற்க்கை மருத்துவம்

தைராய்ட்  என்பது நாம் அனைவரும் பயப்படும் அளவு ஒரு பெரிய வியாதி அல்ல. தைராய்ட். நமது முன் கழுத்தில் சுரக்கும் ஒரு சுரப்பி. அந்த சுரப்பி அதிகரித்தாலோ,  அல்லது குறைந்தாலோ அது நோய். உலகம் முழுவதும் 200 மில்லியன். அதாவது. 20 கோடி மக்கள். இந்த தைராய்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்களை விட பெண்களே இந்த நோய்யால் அதிகம் பாதிக்க்படுகின்றனர்.  இதற்க்கு ஆயுர் வேதம், மற்றும் சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா. இருக்கிறது.

 புதிது, புதிதாக வரும் பல வியாதிகளுக்கு. இன்றைய ஆங்கில மருத்துவ உலகம். புதிது, புதிதாக மருந்துகள் கண்டு பிடித்து கொண்டு இருக்கிறது. ஆனால். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இயற்க்கை மருத்துவ முறைகளில் இதுவரை வந்த நோய்கள் வர போகின்ற நோய்கள் அனைத்திற்குமே தீர்வு இருக்கிறது.

 தைராய்ட் மூலம். உடல் எடை அதிகரித்தல், குறைதல், ரத்த போக்கு,  உடல் வலி. மற்றும் மன சிக்கல் முதல் மல சிக்கல் வரை பல வியாதிகள் வரும்.

தைராய்ட் நோய்க்கு தீர்வாக. தைராக்சின், எல்ட்டிராக்சின்,நார்ம், நியோ மர்கசொல்  போன்ற மருந்துகளை ஆங்கில மருத்துவம் சிபாரிசு செய்கிறது. ஆனால் இவையாவும் அந்த நோய்களுக்கான சப்ளிமன்ட்டாக இருக்கிறதே ஒழிய. தீர்வாக இல்லை. ஆங்கில மருந்துகளால். தைராய்ட் சுரப்பிகளில் உள்ள குறைபாடுகளை ஸீர் செய்ய முடியாது. ஆனால் இயற்க்கை மருத்துவத்தால் முடியும் என்று சொல்கிறார்கள். சித்த வைத்தியர் ஸீ சுப்ரமணியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவர். மொஹமத் சலீம் போன்றவர்கள்.

 ஆயுர்வேத மருத்துவத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?. தண்ணீர்க்கும், நீர்க்கும் உள்ள வேறுபாடு. புரியலை?. ஒரே பொருள். இரண்டு வார்த்தைகள். மஞ்சள், வேப்பிலை, துளசி, வில்வம். போன்ற பல. சித்த மற்றும் ஆயுர்வேதம் இரண்டிலுமே இருக்கிறது. இரண்டிற்க்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடுகள் இல்லை.

 தைராய்ட் நோய்க்கு இயற்க்கை வைத்தியம் சொல்லும் தீர்வுகள்.

 துதுவளை சாரை தினமும் காலையில் குடிப்பதும், மந்தாரை மலர் மொட்டும். சிறந்த தீர்வு.

மந்தாரை என்றால் என்ன. வாழை இலைக்கு மாற்றாக. தையல் இலை என்று ஒன்று வெய்ப்பார்களே. அதுவா. என்று நீங்கள் ஷாக் ஆக வேண்டாம். ஈக்குளலால் தெய்த்த மந்தாரை இலையை தான் சாப்பிட முடியாது.

 மந்தாரை இலையில். குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள், ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின் போன்ற உடலுக்கு நன்மை விளைவிக்கும் பல வேதி பொருட்கள் உள்ளன. இதன் வேர் முதல் மலர், இலை, பட்டை என ஒவ்வொன்றும் பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொட்டுகளை  சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால். தைராய்ட் மட்டும் அல்லாமல் அல்சர்,  ரத்த போக்கு போன்ற பல நோய்களை குணப்படுத்தும்.

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS